Thursday, 31 May 2012

சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் !!


சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் !!

நமது பெருமைக்குரிய தமிழரான, விஸ்வநாதன் ஆனந்த் மயிலாடும்துறையில் 1969ஆம் வருடம்  டிசம்பர்  11ல் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவர் இதுவரை ஐந்து முறை உலக சதுரங்க (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வென்று சாதனை படைத்தவர். முதன் முதலில் 1983'ல் தனது 14 வயதில் இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் . தனது 15 வயதில் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் வென்றார். தனது 16 வயதில் மேலும் இருதடவை இந்தவிருதைப் வென்றார்.

1987'ல் முதன் முதலில்,  உலக இளநிலை வாகையாளர் (WORLD JUNIOR CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் தெகரானில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் உலக சதுரங்கப் (WORLD CHESS CHAMPIONSHIP) போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அடைந்தார். மேலும் 2007, 2008 மற்றும் 2010லும்  உலக சதுரங்க வாகையாளர் (WORLD CHESS CHAMPIONSHIP) பட்டத்தை வென்றார். இப்பொழுது ரஷ்யா தலைநகர்  மாஸ்கோவில்  நடைபெற்ற போட்டியில் இஸ்ரேலின் போரிசு கேல்பண்டை  சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலம்  ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட சர்வேதச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ள இவர் அர்ஜுனா விருதுதேசியக் குடிமகனுக்கான விருது பத்மஸ்ரீ விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் BOOK OF THE YEAR விருது பத்மபூஷன் சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008),  பத்மவிபூஷன்  ஆகிய விருதுகளை பெற்றவர்.

No comments:

Post a Comment